(முன்குறிப்பு; அம்மணி, இதப் படிக்காதீங்க. தயவு செய்து படிக்காதீங்க.)
கேப்பையில நெய் ஒழுகுதுன்னா கேக்கிறவனுக்கு மதியெங்க போச்சு? சரி இந்தப்பழமொழி ஆம்பிளைங்களுக்குத்தான சொல்லியிருக்கு, நம்மளுக்கில்லன்னு கீழ விழுந்தாலும் மீசை… அதுவும் எனக்கில்லையே, டட்டடய்ன்..
மிளகுக் குழம்பு, மிளகுக் குழம்புன்னு என்னமோ “அமிர்த” குழம்பு மாதிரி சிலர் பேசிக்கிறதும், தங்கமலை ரகசியம் மாதிரி ரெசிப்பி வேற தேடி அலையிறதும்.. எனக்கு ஒரே பில்டப் ஆயிருச்சு. நம்ம அம்மணி சைட்ல ரெசிப்பி பார்த்தனா, ப்ரிண்ட் போட்டு வைச்சிருந்தேன்… வீட்டுலவேற ப்ளாக்குக் பேன் (ban). எப்பபாரு மானிட்டர் முன்னாடி உக்கார்ந்து தட்டிக்கிட்டே இருக்கிற, பிட்சாவா திங்கிற, குடும்பத்த கவனிக்கிறதில்லன்னு ஒரே கம்ப்ளையிண்டு. சரி இன்னைக்கு சமைச்சிடுவோம்னு நினைச்சேன். தம்பிவேற எப்ப போன் பண்ணினாலும், “அப்புறம், இன்னைக்கு சமைச்சிட்டியா”, அப்படின்னு கேப்பான். நானும், “எதுக்கு?” அப்படின்னுதான் கேப்பேன். அவனுக்கு (எனக்கும்தான்) இதுவரைக்கும் புரியாத புதிர், எப்படி பாலன் fuel போட்டுக்கிறார்? கட்ட எப்படி ஓடுதுங்கிறது. சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிறது, அதுதான் அம்மணியோட ரெசிப்பி இருக்கேன்னு களத்துல இறங்கினேன். ஏற்கனவே வெறொரு பொண்ணு இந்த மிளகு குழம்பை “எங்கம்மா மிளகு குழம்பு, மிளகு குழம்புன்னு ஒண்ணு செய்வாங்க,..”ன்னு ஒரே paasionateஆ பேசும். அந்தப் பொண்ணு செய்ஞ்சும் போட்டுச்சு. புளிக்காய்ச்சல் மாதிரி இருந்துச்சு. அவ்வளவா இம்ப்ரெஸ் ஆகல நானு. ஒருவேள அதோட ரெசிபி சரியா இருக்காது, ஏன்னா, அந்தப்பொண்ணு இட்லிப்பொடி செய்ஞ்ச கதையக் கேட்டிங்கன்னா நீங்களும் ஒத்துக்குவீங்க. ஒரு டம்ப்ளர் பருப்பாம், ரெண்டு டம்ப்ளர் மிளகாயாம். WTF! இந்த லட்சணத்துல இங்கிலாந்தில கிடைக்கிற மிளகாய் காரம் அதிகம்னு, வேலூர்லயிருந்து ப்ளைட்டுல மிளகாய் வேற வந்துச்சு. (நாடார் கடையில இருக்கிற காரம்போன பலவருசத்து மிளகாய்தான் பழக்கம் போலிருக்கு, anyway), இன்னக்கு நான் “அரைச்சு” (அரைச்சு-ன்னா, பயங்கரமான கவனிப்புன்னு அர்த்தம்)… இட்லி சாப்பிட்டுட்டுத்தான் போகணும்னு.. அம்மா. அன்னைக்கு மூக்கில ஏறின காரம், அதுக்கபுறம் சாப்பிடும்போது நாக்கில ஏறின காரம், இன்னும் இறங்கல. அதுக்கப்புறம் அவங்க வீட்டுக்கு போகவேயில்லையே நானு. so, இந்தப்பொண்ணோட ரெசிபி சரியா இருக்காது, அம்மணியோடது ஆத்தென்டிக்னு, ப்ரிண்டும், கையுமா கிளம்பினேன். எப்பவும் நம்மளோட டச் இல்லாம, அதான், கொஞ்சம் தக்காளி, கொஞ்சம்…னு, இல்லாம இதுவரைக்கும் எந்த ரெசிபியையும் கடைபிடிச்சது செஞ்சதில்ல. அம்மணியோடது ஆத்தெண்டிக், அத குழப்பிடக்கூடாதுன்னு இன்னக்கு தக்காளிகூட போடல.
செஞ்சாச்சு.. எங்கம்மா வைக்கிற உப்புச்சாரே தேவலாம். இந்தவாட்டியும் புளிக்காய்ச்சல் மாதிரிதான் இருக்கு. என்ன, புளிக்காய்ச்சல்ல வெங்காயம் போடமாட்டோம். உப்புச்சார்லயவாது மணமா ரெண்டு கருவாடு இருக்கும். இதுல ஒரு எழவும் இல்ல. ஏற்கனவே, எல்லாரும் “மிளகுக் குழம்புக்கு சரியான காம்பினேசன் பருப்புத்துவையல்தான்னு குடுத்த பில்டப்புல, பருப்பு கண்டிப்பா இருக்கணும் இன்னைக்கு மெனுவிலன்னு, என்னா உள்ளபோனதுக்கப்புறம் எல்லாம் கலந்துக்கத்தானே போகுத்துன்னு, பாசிப்பருப்பை அரிசிக்கூடயே போட்டு, “பருப்புஞ்சா” செஞ்சதா சொல்லிடலாம்னு வைச்சிருந்தேன். அதுல தண்ணி கூடிட்டதால, அப்படியே ஒரு துடுப்ப போட்டு ஒரு கிண்டு கிண்டி களியாக்க்கி, “பருப்புஞ்சா-க் களி”ன்னு புதுசா ஒண்ணு கண்டுபிடிச்சிட்டேன். இப்ப பருப்புஞ்சா-க் களியும், கருவாடு இல்லாத எழவெடுத்த மிளகுக்குழம்பும் ரெடி. பார்க்கவே எனக்கே சாப்பிடப்பிடிக்கல. என்ன செய்யலாம்னு தேடுனப்ப, இன்னைக்கு வாங்கிட்டு வந்த்த பீட்ரூட் கண்ணுல பட்டுச்சு. அப்படியே பீட்ரூட்டுப் பொரியல்னு மண்டையில பல்ப் எரிஞ்சுச்சு. ஆகா, புளிப்பும், காரமும், பருப்பும் ஒரு இனிப்பும் சேர்ந்தா அறுசுவை (நாலு சுவைதான் இருக்கா, உப்பு இருக்கில்ல?) உணவு தயாரிச்ச பெருமை நம்மையே சாரும்னு..பீட்ரூட் பொரியல். “பாரு, ரெம்ப ந்யூட்ரிஷியஸா சமைச்சிருக்கேன்னு பெருமையா சொன்னேன். இதுக்குத்தான் படிச்சவளக்கட்டணுங்கிறத்துன்னு நம்மாளும் பெருமையா தின்னாச்சு. (நம்மாளு நம்ம ப்ளாக் படிக்காது. எப்பயாவது எவய்ங்கூடயாவது சண்டை போட்டுட்டு அதுலயும் நான் அவய்ங்கள வைஞ்சத மட்டும்தேன் காட்டுவேன். :D:)
(பின்குறிப்பு: அம்மணி. அடிக்காதீங்க. வலிக்குது. 😥 )