கர்னாடக ஸ்டைல் பிஸிபேளா பாத். அதாவது ஒரிஜினல் பிஸிபேளா பாத். தக்காளியில் ப்யூரே எடுத்து இறக்கும்போது கொஞ்சமா லெமன் ஜீஸ் விட்டுச் செய்த சுஹாசினி-ஸ்பெஷல் ரசம். சாருஹாசனும் சு-அம்மாவும் “நிறய வைச்சிருக்கையில்ல, எனக்கு அப்புறமாவும் வேணும்”-ன்னு பத்துவாட்டியாவது கேட்டுக்கிட்டாங்க. தமிழ் ஸ்டைல் அப்பளமும் கேரளா ஸ்டைல் அப்பளமும். மல்லித்தழையை அரைச்சு தயிரில் கலந்து பச்சடி. பருப்பு அரைச்சுத்தூவிய கத்தரிக்காய் பொரியல் (இது மட்டும் அம்மாவின் கைவண்ணம்). தயிர் சேமியா (சாதத்துக்குப் பதிலா சேமியா). கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும். சாருஹாசனின் நகைச்சுவை உணர்வும், பளீர் சிரிப்பும் கூடவே வேறு கிடைத்தது. அம்மாவும் சுஹாசினியும் பறிமாறிக்கிட்டே, பேசிக்கிட்டே…. சொல்ல வார்த்தையில்லை எனக்கு.
அப்புறமாய் கொஞ்சம் பேச்சு, கோர்ட் யார்ட்-இல். அழகான உட்புற அலங்காரம். மணியுடன் அறிமுகம். மனுசன் எனக்குமேல வெக்கப்படறார். போகட்டும்னு விட்டுட்டேன். மணியுடன் கைகுலுக்கிவிட்டு ஊரெங்கும் சொல்லிக்கொண்டு திரியும் பாலனையும் போகட்டும்னு விட்டுட்டேன். அப்புறம் டீ வேறு.
ரிட்டர்ன் சவாரி சாருஹாசனின் காரில், சாருஹாசனின் ட்ரைவர் வந்து விட்டுட்டுப் போனார். வெளிய வரைக்கும் வந்து வழியனுப்பும் சுஹாசினி.
பயம்மாயிருக்கு, எங்க போகுதோ, ஏன் போகுதோ தெரியல.