நான் யாருக்கும் தலைப்பிலுள்ள invitation அனுப்பவில்லை. எனக்கே இன்று காலை ஒரு invitation to join Yaari என்னிடமிருந்தே வந்தது. டெலீட் செய்துவிட்டு பெருசாக யோசிக்காமல் போய்விட்டேன். பின்னர், நான் invitation அனுப்பியதாக வேறொருவருக்கும் மெயில் போயிருக்க, ஆடிப்போன அவர் எனக்கு மெயில் கொடுத்துக் கேட்டதினால்தான் எனக்கு மண்டையில பல்ப் எரிஞ்சது, ஆஹா, இன்னும் எத்தனை பேருக்குப் போயிருக்கோ யார் யார் குழம்பிப் போய், குதுகாலிச்சுப் போய், கொதிச்சுப் போயெல்லாம் இருக்காங்களோன்னு.
ஆகவே இதிலிருந்து தெர்ந்து கொள்ளவேண்டியதென்னவென்றால், நான் யாரையும் yaari என்று அழைக்கவில்லை. என்னை ஒருவர் அழைத்தார், நான் அந்த yaari இணையத்தில் சேர்ந்தேன். அவ்வளவே. அதற்கப்புறம் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று எனக்குத் தெரியாது.