முட்டை தோசை
April 26, 2009 by பிரேமலதாபாயாசமும் புது வருடப் பிறப்பும்
April 14, 2009 by பிரேமலதாவருசப் பிறப்பன்னைக்கு பாயாசம் வைக்கணும்னே எனக்குத் தெரியாது. எங்க வீட்ல செய்ததில்லை. சிலர் இன்னைக்கு பாயாசம் செய்யணும்னு சொன்னதை வைச்சு, என்ன பெரிசா பாயாசம்தானே செய்துடலாம்னு ஆரம்பிச்சேன். எனக்கு பாயாசம்னா ஜவ்வரிசி சேமியா பாயாசம்தான். ஜவ்வரிசி இருக்கும்னு நம்பிக்கை இல்லாததால், வெறும் சேமியா போட்டு வைக்கலாம், ரெம்ப ஈஸி-ன்னு ஆரம்பிச்சேன். எதையோ தேடப் போய் ஜவ்வரிசியும் கிடைச்சது. சந்தோசமா ஆரம்பிச்சேன். தேவையான பொருட்களையெல்லாம் வைச்சு போட்டோவேற எடுத்துக்கிட்டேன். போட்டோ நல்லா வரல. பரவாயில்லை பாயாசம்தான் முக்கியம்னு ஜவ்வரிசியை வேகப் போட்டேன். ரெண்டே நிமிசத்துல சேமியாவைச் சேர்த்துட்டு சீக்கிரமா சேர்த்துட்டோமோன்னு கவலையோட பார்த்துக்கிட்டிருந்தேன். ஆனா சேமியா வெந்துவர, எப்போதும்போல் குழையாமல் (காணாப் போகாமல்) ஜவ்வரிசி சரியான பதத்தில் வெந்திருந்தது. இன்னைக்கு எல்லாமே நல்லாப் போய்க்கிட்டிருந்தது. அளந்து வைச்சிருந்த சர்க்கரையில் பாதியைப் போட்டேன். கலந்து விட்டுட்டு எடுத்து சாப்பிட்டுப் பார்த்தேன். அட்டகாசமாயிருந்தது. மறுபடியும் போட்டோ எடுத்திக்கிட்டேன். இப்படி கலையுணர்வோட சமையல் போட்டோ-ன்னு நான் இருக்கும்போது எங்க வீட்டு நண்டு அரிசி டப்பாவைத் திறந்து டம்ளரில் மோந்து கீழ கொட்டி, வாயில் கொட்டின்னு விளையாடிக்கொண்டிருந்த குழப்பம் அப்புறம்தான் கண்ணில் பட்டது. போதாக் குறைக்கு கப்போர்ட்களில் இருந்து இன்னும் நிறையப் பொருட்கள் என் காலடியில் கொட்டி வைக்கப் பட்டிருந்தன! நண்டைத் தூக்கி வாயிலிருந்த அரிசியை தோண்டி எடுத்துவிட்டு வெளியில் கொண்டு விட்டுட்டு, மீதமிருக்கிற சீனியையும் போடலாம், என்ன பெரிசா இனிச்சிரப் போகுதுன்னு மீதமிருந்த சீனியையும் கொட்டிக் கிளறினேன்.
உவ்வே.. வாயில வைக்க முடியல! பால் ஊத்திக் காயவிட்டுப் பார்த்தேன். ம்ஹூம். கொஞ்சம் (கொஞ்சமா, எக்கச்சக்கமா) சுடுதண்ணி ஊத்தினேன். இன்னமும் இனிப்பு வாயில வைக்க முடியல! கடுப்பாகி ப்ளாக் அடிக்க வந்துட்டேன்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பீக்கங்காய்
April 13, 2009 by பிரேமலதாவாங்கி வைச்சிருக்கேன். தேங்காத் துருவல் போட்டு பொரியல் செய்வேன். கொஞ்சம் மசாலா போட்டு சப்பாத்திக்கு தொட்டுக்க செய்வேன். வதக்கி தொகையல் செய்வேன். எல்லாம் போரடிக்குது. வேறமாதிரி என்ன செய்யலாம்னு சொல்லுங்க. செய்திடலாம்.
திராட்சைப் பழ ரசம்
பெப்ரவரி 14, 2009 by பிரேமலதாகேக்கு வெட்டி கேக்கு வெட்டி கேக்கு வெட்டி
பெப்ரவரி 13, 2009 by பிரேமலதாநானெல்லாம் காலேஜ் போனப்புறம்தான் பிறந்தநாள் கொண்டாட(தானே கொண்டாடிக்க) ஆரம்பிச்சேன். என் தம்பி பிறந்த நாளுக்கு எல்லோருக்கும் மிட்டாய் கொடுப்பான். சிந்தாம தட்டைப் பிடிச்சுக்க கூடப் போவேன் நானும். அவ்ளோதான் தெரியும் பிறந்த நாள்னா என்னான்னு. முளைச்சு மூண இலை விடல, அதுக்குள்ள மூணு விதமான கேக்குகளை ரெண்டுவிதமான நாட்களில் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுதுங்க இந்தக்கால நண்டு சுண்டக்கால்லாம்.
நானே ஒரு கேக்கு செஞ்சு கொடுத்தேன், அதை போன பதிவுல பார்க்கலாம். நண்டோட சித்தி ரெண்டுவிதமான் கேக் செய்துட்டு வந்தாங்க. அதுலயும் அந்த பேபிடால் (குழந்தைப் பொம்மை) கேக் கொஞ்சம் கலக்கலாவே இருந்தது. கட் பண்ணவே மனசு வரல. அதனால அந்த இன்னொரு கேக்கை வெட்டினோம்.
ஒரு வருடம் ஓடிவிட்டது
ஜனவரி 9, 2009 by பிரேமலதாஅம்மா செய்த கேக் வெட்டுவதற்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு!
அதனால என்ன. நான் கத்தியையே சாப்பிடுவேன்.
அம்மா செய்றதை சாப்பிட்டு பலாகால அனுபவம் உள்ள அப்பாவின் உதவியோடு அப்படியே முழுங்குவேன்!
போன வருச இந்நேரம் ஏப்பம் விடறதுக்கும் அப்பாதான் உதவி பண்ணினார். நான் கண்ணே திறக்கவேண்டாம். அப்படியே ஏப்பம் விடுவேன்.
ஆனா நான் அப்பயிருந்தே கவனமா பார்த்துக்கிட்டேதான் இருக்கிறேன். என்கிட்ட கேட்காமலே ப்ளாக்லயெல்லாம் ஒர்ர்ரே போட்டோவா போட்டுத் தாக்கிக்கிட்டிருக்கு இந்த அம்மா. இனிமே நானே ஒரு ப்ளாக் எழுதலாம்னு இருக்கேன். அதனால அம்மா இனிமே என்னப்பத்தி எழுதவோ என் போட்டோ போடவோ முடியாது. என் ப்ளாக்கில் நானே எழுதுற வரைக்கும், உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன். வர்ட்டா. பை பை.
wanted shop for rent
December 29, 2008 by பிரேமலதாLooks like I am a very interesting person for some people. or, there is really really another premalatha balan in this world. Once someone operated an email account under my name and have been sending out super duper emails to my friends. then there was a blog maintained for me. now, someone is looking for a shop to rent! I can’t wait to receive all the income from this shop. go here to see the cached page of the ad. It is the ad no. 19.
இட்லி
December 5, 2008 by பிரேமலதாஇட்லி பிடிக்காதவங்ககூட இருக்காங்க அப்படிங்கிறதை இவங்க சொல்லித்தான் முதமுத தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இட்லி ரெம்பப் புடிக்கும். நிறையப் பேருக்கு தக்காளிச் சட்னிதான் இட்லிக்குத் தொட்டுக்குவாங்க. சாம்பார் விரும்பிச்சாப்பிடறவங்களும் இருக்காங்க. இட்லிப் பொடி வைச்சுச் சாப்பிடலாம், ஆனா அதை ரெம்ப ரெம்ப விரும்புவேன்னு சொல்றவங்களப் பார்த்தா சரியான கடுப்பு வரும் எனக்கு. சாம்பார்ல மூழ்க விட்ட இட்லியை ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடறது கொஞ்சம் விளங்காத சமாச்சாரம் எனக்கு. எனக்கு இட்லின்னா தேங்காச் சட்னிதான். அப்படியே கண்ணுல கண்ணீர் வரும் எனக்கு, சந்தோசத்தில்!
ஹாஸ்டலில் தங்கிப் படித்த நாட்களில் என்னையையும் இட்லியை வெறுக்க வைத்தார்கள். அதுக்கப்புறம் இங்கிலாந்து வந்து இட்லியை மறுபடி பார்த்தேன். முதல்ல மாவு சரியாப் புளிக்கல. பாய்லர் ரூம்ல வை, அவனுக்குள் வை. சுடிதண்ணியை நிரப்பி அந்தப் பாத்திரத்துக்குள் வை-ன்னு விதவிதமான அறிவுரைகள். ஒண்ணும் தேவையில்லை ரெண்டுநாள் விட்டா தன்னால புளிச்சுடுது. சூப்பர் இட்லி கிடைக்க ஆரம்பிச்சிருச்சு. ஆசை தீரும்வரை இட்லி+தேங்காய் சட்னின்னு திண்ணு தீர்த்துட்டு, மற்ற பக்க வகைகளுக்குத் தாவினேன். தக்காளி சட்னி வித விதமா செய்ய ஆரம்பிச்சேன். இதுக்கு முன்னாடி என்னோட சமையல் குறிப்புகளை படிச்சவங்களுக்கு ”விதவிதமா”ன்னா என்னான்னு தெரியும். அதாவது, எப்படிச்செய்தேன்னு ஞாபகம் இல்லாததால் ஒவ்வோருமுறையும் வேறமாதிரி செய்றதுக்குப் பேருதான் விதவிதமா! கத்திரிப் பழம் கடைஞ்சு கிண்டியாக்கின சோத்துக்கு அல்லது சோளச்சோத்துக்கு வைப்போம். நாக்கு வேணும் வேணும்னு கேக்கிறமாதிரி இருக்கும். கத்திரி பழமா கிடைக்காத்தால, கத்திரிக்காயை அதே முறையில் செய்து இட்லிக்கு வைச்சேன். சூப்பரா இருந்தது. அதை கத்தரிக்கா கொத்சு-ன்னு வேற ஒருத்தவங்க சொன்னபோதுதான், இந்த அயிட்டத்தை கோம்பை தவிர வேற இடங்கள்லயும் செய்வாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
இப்போல்லாம் ஆவ்னிக்கு இட்லி செஞ்சு கொடுக்கிறேன். வெறும் இட்லி மட்டும்தான் கொடுக்கிறேன்.
இப்படிக்கு,
கத்தரிக்காய் கடைஞ்சது (கொத்சு)வுடன் இட்லி தின்றுகொண்டிருப்பவள்…..
பி.கு. படத்தில் இட்லியுடன் இருப்பது சிவப்புக் குடமிளகாய்ச் சட்னி. எப்படிச் செய்தேனென்று ஞாபகமில்லை. சிலமாதங்களுக்கு முன் எடுத்த போட்டோ இது.
வத்தக் குழம்பு
December 5, 2008 by பிரேமலதாபோன சனிக்கிழமை வத்தக் குழம்பு வைக்கவேண்டிய எமெர்ஜென்ஸி வந்துருச்சு. அப்படியென்ன எமெர்ஜென்ஸின்லாம் அப்புறம் தெரிஞ்சுக்கலாம், இப்போ என்னோட தலையாய பிரச்சினைக்கு வரலாம். ஆத்தென்டிக், முக்கியமா, உண்மையான வத்தக் குழம்பு எப்படி வைக்கிறதுன்னு யாராவது எனக்கு சொல்லிக்கொடுத்தால் நல்லது. இதுவரை மற்ற வீடுகளில் சாப்பிட்ட வத்தக் குழம்புகளில் புளியையும் தண்ணியையும் தவிர வேறெதுவும் தென்படலை. வத்தக் காஞ்ச புளி நல்லால்லாம இருக்காது. ஆனா அதை வத்தக் குழம்புன்னு ஏத்துக்க நான் தயாராய் இல்லை. நான் வைக்கிற குழம்பில் வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் சேர்ப்பதால், சாப்பிட நன்றாக இருந்தாலும்(?!) இதுவும் வத்தக் குழம்பாய் இருக்க முடியாது. போன சனிக்கிழமை அவசரமாய் வத்தக் குளம்பு வைக்கவேண்டி வந்ததால் வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவும் இல்லாமல் வைத்தேன். ஜெயஸ்ரீ எதுக்கெடுத்தாலும் எதாவது ஒரு பருப்பை வறுத்து அரைத்துப் போடுன்னு சொல்லுவாங்கன்னு பருப்புகளை தனித்தனியா அரைத்து வைத்திருக்கிறேன். அன்னைக்கு எந்தப் பருப்பை போட்டேன்னு ஞாபகம் இல்லை ஆனா ஏதோ ஒரு பருப்புப் பொடியைப் போட்டேன். குழம்பில் சுண்ட வத்தலின் கசப்பை சமாளிக்க எதுவும் இல்லாததால் குழம்பு நல்லாவே கசந்தது.
உண்மையான வத்தக் குழம்பு எப்படி வைப்பதுன்னு யாராவது சொல்லிக்கொடுங்களேன்! ஸ்ரீலதா, உங்களுக்கு இது ஒரு நல்ல சான்ஸ்
அப்பாடா ஒரு போஸ்ட் போட்டாச்சு!










